பழனி முருகன் திருக்கோவில் அருகில் இருந்து 8கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் தான் கணக்கன்பட்டி. இங்கும் வாழ்ந்த மிக சக்தி வாய்ந்த மகான் கணக்கன்பட்டி மூட்டை சாமி என்கிற சத்குரு காளிமுத்து பழனி சாமி சித்தர். சாய்பாபாவின் மறு அவதாரமாக கருதப்படும் இவர் வாழும் போதே பல அதிசயங்கள் நிகழ்த்தியவர். ஒருநாள் வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்பம் பேச முடியத தன் குழந்தைக்கு பேச்சு வர பழனி முருகணை காண காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த கார் கணக்கன்பட்டி வழியே வரும்போது அங்கு ஒரு பெரியவர் பச்சை வேஸ்டி சட்டையுடன் தலை பாகையுடன் வழிமறித்தார். இவர்கள் பயத்துடன் இறங்கினர். இவர்கள் சுத்த சைவம் சாமி அவர்கள்”இந்த பொம்பல போய் எதிருல இருக்கற கடையில் பிரியாணி வாங்கிவா” என்றார். இவர்கள் முழித்தார், அருகில் இருந்தவர்கள் சாமி சொல்வதை செய்து விடுங்கள் சாமி சக்தி வாய்ந்தவர் என்றனர். மூக்கை பிடித்து கொண்டு வாங்கி வந்தார் அந்த பெண்மணி. இந்த சாப்பாட்டை அந்த பையனுக்கு கொடு என்றார். தடுமாறினர் அந்த பெண்மணி பொட்டலம் பிரித்து பார்த்தார் அந்த பெண்மணி வாங்கி வந்த பிரியாணி சாம்பார் சாதம் ஆக மாறி இருந்தது...
Comments
Post a Comment